கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் ஒருநாள் முன்னதாகவே ஏப்ரல் 16-ஆம் தேதி இரவு 10 மணியுடன் தேர்தல் பிரச்சாரத்திற்கு தடை விதிக் கப்பட்டதற்கு, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கண்டனம் தெரிவித்துள்ளார். தடைவிதிப்பது என்று முடிவு கட்டி விட்டால் உடனேயே அதைச் செய்யாமல், பிரதமர் மோடி வியாழனன்று 2 கூட்டங்களில் பேசுவதற்கு வாய்ப்பு அளித்திருப்பது, பாஜக நெருக்கடிக்கு தேர்தல் ஆணையம் பணிந்து போவதையே காட்டுகிறது என்று மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார்.